Journey - Pradeep Kumar

Journey

Pradeep Kumar

00:00

06:06

Similar recommendations

Lyric

நான் என்பது யாரோ

பெருந்திரளினிலே ஏடே

நான் என்பதை வீசி

எழுந்தேனே மனமே

தான் என்பது போகும்

பெருங்கணத்தினிலே கூவி

வாவென்றொரு வாழ்க்கை

சிறுகுரலாய் அருளாய்ப் பேச

போகாதொரு ஆழம்தேடி

நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்

வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

தெளி தெளி தெளி தெளி

தெளிவில் பூப்பேன்

காணாதொரு வெளிச்சத்தில்

எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்

வீழாதொரு நிலையினிலே

அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

ஆழ் என்பது மெய்ஞான போதம்

இப்போதில் இப்போதில் இப்போதில்

எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே

இப்போதில் இப்போதில் இப்போதில்

எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம்

இப்போதில் இப்போதில் இப்போதில்

எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே

கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே

ஆறறிவென்றே

அலட்டாமல் எளிதாய் நானும்

ஓர்உயிர் என்றே இருப்பேனே

குழம்பாமல் யார் உடைத்தாலும்

சிரிக்கின்ற பொம்மைப்போலே

நான் என் இயல்பில் இருப்பேன்

ஓடும்நதியின் மேலே

உட்காரும் தட்டான் போலே

லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே

தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்

தான் தூங்கும் மழலைப்போலே

பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்

பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

இப்போது இப்போது இப்போது

கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன்

இப்போது இப்போது இப்போது

ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்

இப்போது இப்போது இப்போது

நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன்

பூத பேத வாத மோகம் மறைகிறதே

நான் எனக்குள்ளே

அசைந்தேனே ஊஞ்சல்போலே

யார் எனை அசைத்தே ரசித்தாரோ

சலிக்காமல்

பேரலைமேலே

விளையாடும் காகம்போலே

யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

சீறும் புலியைப் பார்த்தே

சிரிக்கின்ற சிசுவைப் போலே

கோபங்கள் மறந்தே சிரிப்பேனே

பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே

உருவாகும் வளையல்போலே

நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்

வாகாய் வாகாய் வாழ்கிறேன்

பாகாய்ப் பாகாய் ஆகிறேன்

தோதாய்த் தோதாய்ப் போகிறேன்

தூதாய்த் தூதாய் ஆகிறேன்

போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன்

காதாய்க் காதாய்க் கேட்கிறேன்

ஆரோ ஆராரிரிரோ

தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம்

ஆரோ ஆராரிரிரோ

தாய்ப்போல் பாடுதே

ஆரோ ஆராரிரிரோ

ஆரோ

- It's already the end -