Thoovaanam - D. Imman

Thoovaanam

D. Imman

00:00

04:25

Similar recommendations

Lyric

தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை

நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்

அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்

குயிலென மனம் கூவும்

மயிலென தரை தாவும்

என்னோடு நீ நிற்கும் வேளையில்

புழுதியும் பளிங்காகும்

புழுக்களும் புனுகாகும்

கால் வைத்து நீ செல்லும் சாலையில்

யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்

நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்

காதல் வந்தால் கோபம் எல்லாமே

காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்

இரவுகள் துணை நாடும்

கனவுகள் கடை போடும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்

விரல்களில் விரல் கோர்க்க

உதட்டினை உவர்ப்பாக்க

நீ வந்தால் நான் வண்ண ஓவியம்

நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை

ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை

நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே

கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக

ஓருயிர் கரைவதை நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்

அவரே வரமாய் வருவதை

இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

- It's already the end -